Tuesday, July 2, 2013

பணம் பத்தும் செய்யும் , பாதகம் செய்யுமா ???


கண்ணீருடன் எழுதுகிறேன்..  பெற்ற மகளை , பணத்துக்காக ,
விபச்சாரம் பண்ண வைத்த  தாய்.. ( தொலைகாட்சியில்)...
மகள் பதினாலு வயதில், யார் தந்தை என்றே தெரியாமல் ,
தாய்மையடைய .. அந்த குழந்தையை கருகலைப்பு செய்ய இயலாமல்
பெற்று கொலை செய்திருகிறார்கள்..
எங்கு போகிறது உலகம் ? ? உலகத்தை விடுங்கள்,
எங்கே போகிறது தமிழகம் ?????
உயிர் துடிக்கிறது, அந்த தாயை பார்க்கையிலே,
எவ்வாறு மனது வருகிறது ? இப்படி ஒரு செயலை செய்வதற்கு..
அதுவும் பொண்ணுக்கு, மயக்க மருந்து கொடுத்து, அறையின்,
கதவை தாழ் போட்டு .............. கடவுள் இருக்கிறாரா ???
மனது மட்டும் வேதனை கொள்ளவில்லை ,..
உயிரும் துடிக்கிறது ... தாய்மையை நினைத்து,
சாகடிக்க்கபடுவோம் என்று தெரிந்தும் மண்ணில் பிறந்த
அந்த சிசுவை நினைத்து, ...
பணம் பத்தும் செய்யும் , பாதகம் செய்யுமா ???...


No comments:

Post a Comment